ஆல் இந்தியா நெட்வொர்க்கர் அசோசியேசன் முதல் மாநில விளக்க கூட்டம்
ஆல் இந்தியா நெட்வொர்க்கர் அசோசியேசன் முதல் மாநில விளக்க கூட்டம்
ஆல் இந்தியா நெட்வொர்க்கர் வெல்ஃபேர் அசோசியேஷன் முதல் மாநில விளக்கக் கூட்டம் வருகிற நவம்பர் 8ந்தேதி சனிக்கிழமை காலை 10 மணியளவில் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள எல் கே எஸ் திருமண மண்டபத்தில் நடைபெற உள்ளது. முதல் மாநில விளக்கக் கூட்ட பத்திரிகை வெளியீட்டு விழா மற்றும் கலந்தாய்வு கூட்டம் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது. இவ்விழாவில் அகில இந்திய துணைத் தலைவர் ஜி பிரபாகரன் வழக்கறிஞர் தலைமை தாங்கினார். ராஜசேகர் அகில இந்திய இணை செயலாளர் வரவேற்று பேசினார். உயர்நிலைக் குழு உறுப்பினர் புஷ்பராஜ், உயர்நிலைக் குழு உறுப்பினர்கள் இளங்கோ, ரவிச்சந்திரன் ஆல் இந்திய நெட்வொர்க்கர் அசோசியேஷன் திருச்சி மாவட்ட தலைவர் செல்வராஜன், கருத்து கந்தசாமி திருச்சி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் முன்னிலை வகித்தனர். ஆல் இந்திய நெட்வொர்க்கர் அசோசியேசன் மாநில இணைச் செயலாளருமான முனைவர் க. முத்துசாமி (எ) முத்துசூர்யா, கல்லகம் செல்வகுமாரன் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர்,லால்குடி தொகுதி இணை ஒருங்கிணைப்பாளர் பார்த்திபன், திருவரம்பூர் தொகுதி பொறுப்பாளர் ராபர்ட், மணப்பாறை தொகுதி பொறுப்பாளர் பிரபு, கரூர் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர் வெற்றிவேல், கணபதி, பொன்னுசாமி, சுப்ரமணியம், ராஜசேகர் மாநிலத் துணைத் தலைவர் , துறையூர் முருகேசன், ஜனாதிபதி, அப்பாஸ், தேவன்நேசன், கிரிதரன், லட்சுமணன், விஜயகுமாரி, சரண்யா,காயத்ரி, சுஜாதா, ராணி, கரோலின் உயர்நிலை குழு, பாண்டியன் திருச்சி கிழக்கு சட்டமன்றத் தொகுதி இணை அமைப்பாளர் மற்றும் நிர்வாகிகள் முதல் மாநில விளக்கக் கூட்ட பத்திரிக்கை வெளியிட்டனர். செல்வகுமார் அகில இந்திய இணைச் செயலாளர் உயர்நிலைக்குழு உறுப்பினர் நன்றிஉரை கூறினார்.
What's Your Reaction?
Like
1
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0