இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி கைப்பந்து போட்டியில் முதல் இடத்தில் சாதனை

Oct 26, 2025 - 21:14
Oct 26, 2025 - 21:16
இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி கைப்பந்து போட்டியில் முதல் இடத்தில் சாதனை

இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி கைப்பந்து போட்டியில் முதல் இடத்தில் சாதனை

திருச்சி அண்ணா பல்கலைக்கழக மண்டல அளவிலான 13வது ஜோன் ஆண்கள் கைப்பந்து விளையாட்டுப் போட்டி நடைபெற்றது. இதில் இந்திரா கணேசன் பொறியியல் கல்லூரி மாணவர்கள் கைப்பந்து விளையாட்டுப் போட்டியில் முதல் இடத்தில் வெற்றி வாகை சூடினர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு டாக்டர் .இ. சோமசுந்தரம் இயக்குநர் (வேளாண் வணிக மேம்பாடு) தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் கோயம்புத்தூர். ஆர்.சி.ஐ - யு.பி.ஐ ஒருங்கிணைப்பாளர் அவர்கள் சான்றிதழ், கேடயம் மற்றும் பரிசுகள் வழங்கிச் சிறப்பித்தார். வெற்றி பெற்ற மாணவர்களை இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன், இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன், பதிவாளர் முனைவர் எம்.அனுசுயா மற்றும் உடற்கல்வி இயக்குநர் முருகானந்தம் ஆகியோர் பாராட்டி வாழ்த்துக்களைத் தெரிவித்து நினைவு பரிசு வழங்கி சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0