திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக ஹவுஸ் யூனிபார்ம் வழங்கல்

Nov 8, 2025 - 13:24
Nov 8, 2025 - 20:01
திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக ஹவுஸ் யூனிபார்ம் வழங்கல்

திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மாணவ மாணவியர்களுக்கு தனியார் பள்ளிக்கு நிகராக ஹவுஸ் யூனிபார்ம் வழங்கல்

திருச்சி மாவட்டம் இனாம் பெரியநாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு ஹவுஸ் யூனிபார்ம் வழங்கப்பட்டது.

இங்கு பயிலக்கூடிய அனைத்து மாணவர்களும் தனியார் பள்ளிக்கு நிகராக இருக்க வேண்டும் என்ற நோக்கில் ஹவுஸ் யூனிபார்மினை ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் காமராஜ், பள்ளியின் தலைமை ஆசிரியர் அழகு சுப்பிரமணியன் மற்றும் அனைத்து ஆசிரியர்களும் பள்ளி மாணவர்களுக்கு வழங்கினர். 

நிகழ்வில் பள்ளி மேலாண்மை குழு தலைவி திருமதி மாதவி, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவி திருமதி மகேஸ்வரி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக பட்டதாரி ஆசிரியர் திருமதி ஜெய்நபி வரவேற்புரையாற்ற, இறுதியாக பட்டதாரி ஆசிரியர் திருமதி நந்தினி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0