திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் சம்மேளனம் மாநில மாநாடு
திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் வங்கி ஊழியர் சம்மேளனம் மாநில மாநாடு
இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம் தமிழ்நாடு 14 வது மாநில மாநாடு திருச்சியில் வரும் ஜூலை 25, 26 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. அதன் வரவேற்பு குழு அமைப்பு கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.
கூட்டத்தில் மாநில தலைவர் சுனில்குமார், பொதுச் செயலாளர் ரவிக்குமார், அகில இந்திய செயலாளர் ஹரிராவ், அகில இந்திய இணை செயலாளர் அஸ்வத், மாநில செயலாளர் சர்வேசன், மாவட்ட செயலாளர் மனோகர், மற்றும் உறுப்பு சங்கங்களின் பொறுப்பாளர்கள், முன்னாள் பொறுப்பாளர்கள் மற்றும் வங்கி ஊழியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் வரவேற்பு குழு தலைவராக பெல் சி ஐ டி யு சங்க தலைவர் ஸ்ரீதர், செயலாளராக ஹேமன்குமார், பொருளாளராக ரகுராமன் ஆகியோர் தெர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தில் தோழமை சங்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்து மாநாடு சிறப்பாக நடத்துவதற்கான ஆலோசனைகள் வழங்கினார்கள்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0