தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் : சுப்பையா பாண்டியன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார்

Oct 28, 2025 - 15:33
Oct 28, 2025 - 16:44
தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் :  சுப்பையா பாண்டியன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார்

தேவர் ஜெயந்தியை முன்னிட்டு திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் : சுப்பையா பாண்டியன் தலைமையில் மாவட்டச் செயலாளர் சீனிவாசன் வழங்கினார் 

திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் தில்லை நகரில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. முன்னாள் அதிமுக திருச்சி மாநகர் மாவட்ட மருத்துவர் அணி தலைவர் கே.எஸ்.சுப்பையா பாண்டியன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட முன்னாள் அதிமுக மகளிர் அணி செயலாளரும், முன்னாள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி கவுன்சிலருமான டாக்டர் தமிழரசி சுப்பையா முன்னிலை வகித்தார். இதில் திருச்சி மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் துணை மேயருமான ஜெ.சீனிவாசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வேஷ்டி சேலை, மதிய உணவு வலி நிவாரண மருந்துகள் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் அய்யப்பன், பொருளாளர் ராஜசேகர், மாவட்ட துணை செயலாளர்கள் வனிதா, பத்மநாதன், எம்ஜிஆர் இளைஞர் அணி மாவட்ட செயலாளர் ரஜினிகாந்த், வர்த்தகர் அணி மாவட்டச் செயலாளர் ஜெரால்டு, மாவட்ட சிறுபான்மை பிரிவு செயலாளர் தென்னூர் அப்பாஸ், மாவட்ட பாசறை செயலாளர் லோகநாதன், பகுதி செயலாளர்கள் எம். ஆர்.ஆர். முஸ்தபா, புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ரோஜர் ,மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் கருமண்டபம் சுரேந்தர், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணை செயலாளர் சில்வர் சதீஷ்குமார், முன்னாள் கவுன்சிலர் நத்தர்ஷா, வழக்கறிஞர் சி.பி ரமேஷ், வழக்கறிஞர் புவனேஸ்வரி, வட்டச் செயலாளர்கள் தில்லை முருகன், கணேசன், ஜெகதீசன் வெல்லமண்டி கன்னியப்பன், சிந்தை ராமச்சந்திரன், ராதாகிருஷ்ணன் , பீம நகர் மகேந்திரன் மார்கெட் முத்துராமலிங்கம் மற்றும் மாவட்ட நகர வட்டக் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0