திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு

Dec 6, 2025 - 16:36
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறையில் வளனார் தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வு

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத்துறையில் இயங்கிவரும் வளனார் தமிழ் ஆய்வுமன்றத்தின் முதல் நிகழ்வு நடைபெற்றது. தமிழாய்வுத்துறை உதவிப்பேராசிரியர் முனைவா் ரெ.நல்லமுத்து தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் துறைத்தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் முன்னிலை வகித்தார். முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் ரா.ஹேமா வரவேற்புரை வழங்கினார். முதுகலை முதலாம் ஆண்டு மாணவர் செ.ஜா. அரசி மார்லன் எழுதிய திருத்தப்படாத கவிதைகள் என்ற கவிதைத் தொகுப்பு குறித்து முதலாம் ஆண்டு இளங்கலை மாணவர் ஜோ.காயத்திரி நூல் அறிமுகம் செய்தார். இளங்கலை மூன்றாம் ஆண்டு மாணவர் ச.ஆசிக்டோனி சிலப்பதிகாரத்தில் ஆளுமை என்ற தலைப்பில் ஆய்வுக்கட்டுரையை சமர்ப்பித்தார். இளங்கலைத் தமிழ் இலக்கியம் இரண்டாம் ஆண்டு மாணவர் ம.திவ்யஸ்ரீ இன்றைய சமூகத்தில் உரிமைமீறல் என்ற தலைப்பில் சமூக உரையாடலை நிகழ்த்தினார். முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் சே.சாம்சன் இனிகோ டூரிஸ்ட் பேமிலி திரைப்படம் குறித்தத் திறனாய்வை வழங்கினார். இளங்கலைத்தமிழ் இரண்டாம் ஆண்டு மாணவர் மு.பத்மஸ்ரீ நன்றியுரையாற்றினார்.

முதுகலைத்தமிழ் முதலாம் ஆண்டு மாணவர் அ.சந்தியா மேரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். தமிழாய்வுத்துறைப் பேராசிரியா்கள், மாணவா்கள் உள்பட 75 பேர் இந்நிகழ்வில் பங்கேற்றனர். தமிழ் ஆய்வு மன்ற நிகழ்வை மன்றப் பொறுப்பாளா்கள் முனைவர் ஜா.பெஞ்சமின் ஆரோன் டைட்டஸ் மற்றும் திருமிகு இரா. முரளிகிருட்டிணன் ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0