பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

Apr 29, 2026 - 16:59
பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

பெயர் விலாசம் தெரியாத நபர் மரணம் : நல்லடக்கம் செய்த சமூக செயற்பாட்டாளர்

திருச்சி காந்தி மார்க்கெட் தஞ்சை சாலை பிச்சை நகர் அருகே சுமார் 65 வயது மதிக்கத்தக்க முதியவர் இறந்து உள்ளார். தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல் நிலைய காவலர்கள் சம்பவம் இடம் சென்று விசாரிக்கையில், சுமார் 65 வயது மதிக்கத்தக்க ஆண் நபர் இறந்து கிடந்துள்ளார். மேற்படி நபருக்கு உறவினர்கள் என்ற முறையில் யாரும் இல்லாததாலும், உடலை யாரும் உரிமை கோரவில்லை. நல்லடக்கம் செய்வதற்காக திருச்சி காந்தி மார்க்கெட் காவல்நிலைய இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் உரிமை கோரப்படாத உடலை நல்லடக்கம் செய்வதற்காக, ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகாசிரியர் விஜயகுமாருக்கு தகவல் அளித்தார். தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் காந்தி மார்க்கெட் காவல்நிலைய இரண்டாம் நிலை காவலர் அருண்குமார் முன்னிலையில் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் உரிமை கோரப்படாத உடலுக்கு உரிய மரியாதையுடன் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0