தமிழ் மொழிக்காக தமிழ் நூல்களை ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் அறிமுகம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்

May 19, 2026 - 13:54
தமிழ் மொழிக்காக தமிழ் நூல்களை ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் அறிமுகம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்

தமிழ் மொழிக்காக தமிழ் நூல்களை ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் அறிமுகம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்

திருச்சி அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் தமிழைக் காக்க வேண்டுமென்றால் தமிழ் நூல்களைக் காக்க வேண்டும், அவை தமிழறிஞர்களுக்குப் பயன்பட வேண்டும், அதன் மூலம் தமிழ் வளர்க்கவேண்டும். தமிழில் எத்தனையோ அரிய நூல்களைப் பாதுகாக்க இயலாமல் இழந்திருக்கிறோம் அந்த இழப்பு எந்த வகையிலும் ஈடு செய்ய முடியாதது. அதை உணர்ந்தே என் காலத்தில் நூல்களைக் காப்பதற்கென்றே தனி கவனம் எடுத்துக்கொண்டு. தமிழ் புத்தகத்தை காப்பதன் மூலம் தமிழ் மொழியையும் அதில் உள்ள செறிவான சிந்தனைகளையும் எதிர்காலத் தமிழர்களுக்கு எடுத்துச் செல்ல முடியும் என்ற இலக்குடன் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகத்தை இருபத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக மனைவி வழக்கறிஞர் சித்ரா, மகள் கீர்த்தனா விஜயகுமார் ஆகியோர் ஆதரவுடன் நடத்தி வருகிறார். மேலும், ஒரு நாள் ஒரு புத்தகம் தலைப்பில் தமிழ் புத்தகத்தையும், எழுத்தாளரையும் முகநூல் வாயிலாக அறிமுகம் செய்து வருகிறார். தமிழ் மொழி உலகின் தொன்மையான செம்மொழிகளில் ஒன்றாகும். அதன் பெருமையை நிலைநிறுத்தவும், தமிழ் இலக்கிய செல்வங்களை அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கவும் தமிழ் நூல்களை அறிமுகப்படுத்துவது மிக முக்கியமான பணியாகும். குறிப்பாக தினம் ஒரு புத்தகம் என்ற முறையில் தமிழ் நூல்களை தொடர்ந்து அறிமுகம் செய்து வருவது, தமிழ் மொழிக்கான அர்ப்பணிப்பையும் பண்பாட்டு சேவையையும் வெளிப்படுத்துகிறது .

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0