திருச்சி கேர் சர்வதேச பள்ளியில் புகழ்பெற்ற இயற்பியல் பயிலரங்கம் தொடக்கம் : பேராசிரியர் ஹெச்.சி. வர்மா பங்கேற்பு

Jun 3, 2026 - 19:46
Jun 3, 2026 - 20:07
திருச்சி கேர் சர்வதேச பள்ளியில் புகழ்பெற்ற இயற்பியல் பயிலரங்கம் தொடக்கம் : பேராசிரியர் ஹெச்.சி. வர்மா பங்கேற்பு

திருச்சி கேர் சர்வதேச பள்ளியில் புகழ்பெற்ற இயற்பியல் பயிலரங்கம் தொடக்கம்- பேராசிரியர் ஹெச்.சி. வர்மா பங்கேற்பு

திருச்சி கேர் சர்வதேச பள்ளி மற்றும் இந்திய இயற்பியல் ஆசிரியர்கள் சங்கம் (IAPT - தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மண்டலம்) இணைந்து நடத்தும் இயற்பியல் கற்பித்தலில் தேர்ச்சி பெறுதல் என்ற நான்கு நாள் பயிலரங்கம் இன்று கேர் பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

இந்த பயிலரங்கினைப் புகழ்பெற்ற இயற்பியல் அறிஞரும், ஐஐடி கான்பூரின் ஓய்வுபெற்ற பேராசிரியருமான பத்மஸ்ரீ டாக்டர் ஹெச்.சி. வர்மா தலைமை தாங்கி நடத்தினார். தனது ‘கான்செப்ட்ஸ் ஆஃப் பிசிக்ஸ்’ புத்தகங்கள் மூலம் உலகெங்கிலும் உள்ள மாணவர்களிடையே மிகவும் பிரபலமானவர்

இவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த தொடக்க விழாவில் பேராசிரியர் வர்மா உரையாற்றுகையில், பாடங்களை மனப்பாடம் செய்யாமல் அதன் அடிப்படைக் கருத்துகளை ஆழமாகப் புரிந்துகொள்ளுதல், மாணவர்களிடையே கேள்விகள் கேட்கும் மற்றும் ஆராயும் பண்பை வளர்த்தல், நவீன மற்றும் புதுமையான முறைகளைப் பயன்படுத்தி இயற்பியலை எளிமையாக்குதல் போன்றவற்றை வலியுறுத்தி பேசினார்.

 மேலும் பல்வேறு பள்ளிகளிலிருந்து வருகை தந்துள்ள இயற்பியல் ஆசிரியர்களுக்கு இந்தத் தளம் ஒரு சிறந்த வாய்ப்பாக அமைந்திருந்தது. ஜூன் 3 முதல் ஜூன் 6 வரை நடைபெறவுள்ள இந்த நான்கு நாள் பயிற்சியில்: நேரடி செயல்முறை விளக்கங்கள், கலந்துரையாடல், செயல்முறை வழி கற்றல், ஆகியவற்றின் மூலம் ஆசிரியர்களின் கற்பித்தல் திறனை மேம்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இயற்பியல் கற்றலை மாணவர்களுக்கு மிகவும் சுவாரஸ்யமானதாகவும், அர்த்தமுள்ளதாகவும் மாற்றுவதற்கு ஆசிரியர்களுக்குத் தேவையான உத்திகளை வழங்குவதே இந்தப் பயிலரங்கின் முக்கிய நோக்கம்" என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும் கல்வியில் சிறந்து விளங்குவதற்கும், ஆசிரியர்களை வலுப்படுத்துவதற்கும் கேர் சர்வதேச பள்ளி எடுத்து வரும் இம்முயற்சி கல்வி வட்டாரத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0