திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் மண் வளம் பாதுகாப்பு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு

Jun 12, 2026 - 20:50
திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் மண் வளம் பாதுகாப்பு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு

திருச்சி சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் மண் வளம் பாதுகாப்பு இயக்கம் பற்றிய விழிப்புணர்வு

திருச்சிராப்பள்ளி மாவட்டம் சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தின் மூலம் மண் வளம் பாதுகாப்போம் இயக்கம் (கேத் பச்சாவோ அபியான்) என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி திருச்சி மாவட்டத்தின் அனைத்து வட்டாரங்களிலும் ஜூன் 1, 2026 முதல் ஜூன் 30, 2026 வரை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, மண்ணச்சநல்லூர் வட்டாரம், கண்ணனூர் கிராமத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப்பேராசிரியர் முனைவர் ராதிகா, மண் வளம் பாதுகாப்போம் இயக்கத்தின் குறிக்கோள்கள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கினார். மேலும் விவசாயிகள் இரசாயன உரங்களின் பயன்பாட்டை குறைத்து ஒருங்கிணைந்த உர மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தினார். இணை பேராசிரியர் முனைவர் மு சகிலா, உயிர் உரங்கள், பசுந்தாள் உரங்களின் நன்மைகள் மற்றும் இயற்கை வேளாண்மை குறித்து விவரித்தார். கரும்பு ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் முனைவர் அன்பானந்தன் அவர்கள் மண் பரிசோதனை செய்வதன் வழிமுறைகள் மற்றும் மண் வளத்திற்கு ஏற்ப உரமிடுதலின் நன்மைகள் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்ணச்சநல்லூர் வட்டார வேளாண் உதவி இயக்குநர் திருமதி செல்வராணி மற்றும் வேளாண் துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0