திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா
திருச்சி கேர் பொறியியல் கல்லூரியின் 14வது பட்டமளிப்பு விழா கேர் கல்வி நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி பி. பிரதீவ் சந்த் தலைமையில் நடைபெற்றது. கேர் பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் சு. சாந்தி வரவேற்புரையாற்றி, பட்டமளிப்பு விழா அறிக்கையை வழங்கி, கல்லூரியின் கல்விசார் சாதனைகள் மற்றும் முக்கிய முன்னேற்றங்களை எடுத்துரைத்தார். தொடர்ந்து சிறப்பு விருந்தினரான சிஸ்கோ எனர்ஜி பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் என்.பி. சுகுமார் பட்டமளிப்பு விழா உரையாற்றினார். சிறப்பு விருந்தினர் பட்டம் பெற்ற மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கி அவர்களின் சாதனைகளை பாராட்டினார். தனது உரையில், தொழில்முறை வெற்றியை அடைவதற்கு அர்ப்பணிப்பு உணர்வு, நேர்மை, புதுமை சிந்தனை மற்றும் தொடர்ச்சியான கற்றல் ஆகியவற்றின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். மேலும், வேகமாக வளர்ந்து வரும் தொழில்நுட்ப உலகின் சவால்களை எதிர்கொள்ள மாணவர்கள் தங்களது திறன்களை தொடர்ந்து மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தினார். அதனைத் மாணவர்கள் தொடர்ந்து, வேலை தேடுபவர்களாக மட்டுமல்லாமல் வேலைவாய்ப்புகளை உருவாக்குபவர்களாகவும் உருவெடுக்க வேண்டும் என்றும், தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தினார். பட்டம் பெற்ற அனைத்து மாணவர்களுக்கும் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், பெற்றோர்கள், பட்டம் பெற்ற மாணவர்கள் மற்றும் சிறப்பு அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கேர் பொறியியல் கல்லூரியில் பட்டம் பெற்ற மாணவர்கள் பல்வேறு முதுநிலை மற்றும் இளநிலைப் பட்டப்படிப்புகளைச் சேர்ந்தவர்கள் ஆவர். செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திரக் கற்றல் (Artificial Intelligence and Machine Learning) சிறப்புப் பிரிவுடன் கூடிய கணினி அறிவியல் மற்றும் பொறியியல் முதுநிலை (M.E. CSE - AI & ML) படிப்பில் 3 மாணவர்கள் பட்டம் பெற்றனர். மேலாண்மைத் துறையில் முதுநிலை வணிக நிர்வாகம் (Master of Business Administration படிப்பில் அதிகபட்சமாக 67 மாணவர்கள் பட்டம் பெற்றனர். MBA) இளநிலைப் பட்டப்படிப்புகளில் செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவு அறிவியல் பிரிவில் 48 மாணவர்கள், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் பிரிவில் 61 மாணவர்கள், மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் பொறியியல் பிரிவில் 20 மாணவர்கள், இயந்திரப் பொறியியல் பிரிவில் 21 மாணவர்கள் மற்றும் சிவில் பொறியியல் பிரிவில் 7 மாணவர்கள் பட்டம் பெற்றனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0