திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் : மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

Jul 9, 2026 - 17:45
Jul 10, 2026 - 08:43
திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் : மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் : மாவட்ட செயலாளர்கள் பங்கேற்பு

திருச்சி ஒருங்கிணைந்த மாவட்ட அண்ணா தொழிற்சங்க பேரவையின் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. புறநகர் வடக்கு மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார்.

 கூட்டத்தில் அண்ணா தொழிற்சங்க பேரவை மாநில செயலாளர் இரா.தமிழரசன், மாநிலத் தலைவர் பொன் தனபால், பொருளாளர் அப்துல் ஹமீது, மாநில போக்குவரத்து பிரிவு செயலாளர் பழனி ஆகியோர் சிறப்புரை யாற்றினார்கள்.

மாநகர் மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராஜேந்திரன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் என் கார்த்தி, மாநில பீடி மற்றும் தீப்பெட்டி பிரிவு செயலாளர் சகாபுதீன், மாநகர அமைப்பு சாரா ஓட்டுனர் அணி செயலாளர் ஞானசேகர் ஆகியோர் வரவேற்று பேசினார்கள். கழக அமைப்புச் செயலாளர்கள் ரத்தினவேல், மாநகர் மாவட்ட செயலாளர் சி.கார்த்திகேயன், புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் மனோகரன், புறநகர் வடக்கு மாவட்ட செயலாளர் யோகநாதன், கிழக்கு மாவட்ட செயலாளர் டி.என் சிவக்குமார், ஜெயலலிதா பேரவை துணை செயலாளரும் கவுன்சிலருமான அரவிந்தன், மாநில சிறுபான்மை நலப் பிரிவு துணை செயலாளர் ஆர்.எஸ். புல்லட் ஜான், பேரவை துணைச் செயலாளர்கள் ஜெயம் ஸ்ரீதர், டி ஆர் சுரேஷ் குமார், மகளிர் அணி துணை செயலாளர் சுபத்ரா சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாநகர துணை தலைவர் அன்பழகன் நன்றி கூறினார். கூட்டத்தில் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் வனிதா, பேரவை செயலாளர் பொன்னார், வழக்கறிஞர் அணி முத்துமாரி, பகுதி செயலாளர்கள் எம் ஆர்.ஆர். முஸ்தபா, கலிலுல் ரகுமான், புத்தூர் ராஜேந்திரன், வாசுதேவன், ஜான் எட்வர்ட் குமார், செல்லப்பா, பொன்னர், எடத்தெரு பாபு, தில்லை முருகன், வாசுதேவன், சுரேஷ் குப்தா, பொன்னகர் மோகன், கருமண்டம் முத்துக்குமார், வி.பி. எஸ் மகாதேவன், இலியாஸ், உறந்தை முத்தையா மற்றும் எம்ஜிஆர் மன்றம் அப்பாக்குட்டி, நத்தர்ஷா மற்றும் பலர் கலந்து கொண்டனர்

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0