செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் ஆய்வறிக்கை வரைவு பயிலரங்கம்

Jul 27, 2026 - 17:09
Jul 27, 2026 - 17:10
செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் ஆய்வறிக்கை வரைவு பயிலரங்கம்

செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் ஆய்வறிக்கை வரைவு பயிலரங்கம்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையும் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் செயின்ட் ஜோசப் கல்லூரித் தமிழாய்வுத் துறையில் இளங்கலை மூன்றாம் ஆண்டு பயில்கிற மாணவர்களுக்கான படிப்பிடைப் பயிற்சி ஆய்வு அறிக்கை வரைவு பயிலரங்கம் நடைபெற்றது. கல்லூரியின் துணை முதல்வர் அருள்முனைவர் அருள் ஒளி, சே.ச. தலைமையில் நடைபெற்ற இப்பயிலரங்கில் தொடக்கத்தில் படிப்பிடைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் டேவிட் வில்சன் வரவேற்பு உரையாற்றினார். தமிழாய்வுத்துறைத் தலைவர் முனைவர் ஆ.ஜோசப் சகாயராஜ் வாழ்த்துரை ஆற்றினார். தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் துறைத் தலைவர் பேராசிரியர் முனைவர் இரா.காமராசு கள ஆய்வும் ஆவணப்படுத்துதலும் என்கிற பொருண்மையில் உரையாற்றினார். இளங்கலைத் தமிழ் இலக்கிய மாணவர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், பேராசிரியர்கள் இப்பயிலரங்கில் பங்கேற்று பயன்பெற்றனர். உரையைத் தொடர்ந்து மூன்றாம் ஆண்டு மாணவர்களுடன் பேராசிரியர் இரா.காமராசு கலந்தாய்வு நடத்தினர். நிறைவில் படிப்படைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் முனைவர் லா.சார்லஸ் நன்றியுரை ஆற்றினார். முனைவர் பட்ட ஆய்வாளர் தா.மேரி மார்டினா நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0