திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக 5ம் ஆண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

Aug 9, 2026 - 11:28
Aug 9, 2026 - 11:29
திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக 5ம் ஆண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக 5ம் ஆண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்

திருச்சி அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக 5ம் ஆண்டு போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மாராத்தான் அரசு பொது மருத்துவமனை அருகில் துவங்கியது.

இந்த நிகழ்ச்சியை அரசு பொது மருத்துவமனையின் காவல் நிலைய காவல் ஆய்வாளர் செல்வகுமார் மற்றும் பள்ளியின் முதல்வர். திருமதி. உஷாராகவன் ஆகியோர் இணைந்து துவக்கி வைத்தனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் மாணவ, மாணவிகள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

போட்டி தூங்குவதற்கு முன்பாக மாணவர்களுக்கு காவல்துறை ஆய்வாளர் அவர்கள் உடல்நலம் மற்றும் போதை பழக்கத்தில் இருந்து இளைஞர்கள் எவ்வாறு தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்று கூறி, போதைக்கு எதிரான உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பின்பு மாணவர்கள் அனைவரையும் பச்சை கொடி காட்டி போட்டியை காவல்துறை ஆய்வாளர் துவக்கி வைத்தனர். இதில் பள்ளியின் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் என மொத்தம் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கூடி இருந்தனர்.

இறுதியில் பள்ளியில் நிறைவடைந்த இந்த மாரத்தான் நிறைவு விழாவில் ஆய்வாளர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற 40க்கு மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழையும் பதக்கத்தையும் கேடயங்களையும் வழங்கி வாழ்த்தினார். இந்த மாராத்தான் போட்டி பள்ளியின் உடற்கல்வி துறையின் சார்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0