நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரமாண்ட வரவேற்பு : மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை

Aug 13, 2026 - 16:45
Aug 13, 2026 - 16:46
நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரமாண்ட வரவேற்பு : மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை

நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரமாண்ட வரவேற்பு : மாநகர் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் கார்த்திகேயன் அறிக்கை

நாளை திருச்சி வரும் எடப்பாடி பழனிச்சாமிக்கு பிரம்மாண்ட வரவேற்ப்பு அளிக்குமாறு திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் முன்னாள் ஆவின் தலைவருமான சி .கார்த்திகேயன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அதிமுக பொதுச்செயலாளரும், தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிச்சாமி நாளை 14-ந்தேதி தஞ்சையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ள செல்கிறார். தஞ்சை செல்லும் வழியில் நாளை காலை 7 மணிக்கு திருச்சி-தஞ்சை ரோட்டில் உள்ளபழைய பால்பண்ணை ரவுண்டானாவில் திருச்சி மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பிரம்மாண்டமான உற்சாக வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

 இவ்வரவேற்பு நிகழ்ச்சியில் திருச்சி மாநகர் மாவட்ட கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரு ம் பெருந்திரளாக கலந்து கொண்டு, பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு எழுச்சிமிகு வரவேற்பு அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். மேலும் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றி பெற வாழ்த்தி, இந்த வரவேற்பு நிகழ்வை மாபெரும் எழுச்சி யுடன் நடத்திடு வோம். அனைவரும் திரளாக கலந்து கொண்டு, கழகத்தின் ஒற்றுமையையும் எழுச்சியையும் பறைசாற்றுவோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0