இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் UBA கிராமப்புற மேம்பாடு குறித்தக் கருத்தரங்கம்

Oct 29, 2025 - 21:19
இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின்  UBA கிராமப்புற மேம்பாடு குறித்தக் கருத்தரங்கம்

இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் UBA கிராமப்புற மேம்பாடு குறித்தக் கருத்தரங்கம்

திருச்சி இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் உன்னைத் பாரத் அபியான் (UBA) அமைப்பின் சார்பாக, கிராமத்தின் தரத்தை உயர்த்துவதற்காகவும் , கிராமமக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் கிராமங்களைத் தத்தெடுத்து வருகின்றனர். அவர்களுக்கு அரசு வழங்கும் மானியங்கள் மற்றும் உதவித்தொகைகளைப் பெறும் வழிமுறைகள் குறித்து இணைய வழிக் கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது. அதில் சிறப்பு விருந்தினராக பலர் கலந்து கோண்டு சிறப்பித்தனர். மேலும் நிகழ்ச்சியில் இந்திரா கணேசன் கல்விக் குழுமத்தின் ஆலோசகராக திருச்சிராப்பள்ளி ரோட்டரி கிளப் தலைவர் சீனிவாசன் ஆலோசகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் தமது உரையில் சில ஆலோசனைகளை வழங்கினார். குறிப்பாக கிராமப்புற மாணவ, மாணவிகளைத் தத்தெடுத்து அவர்களுக்கான கல்விக் கட்டணத்தையும் வழங்குவதாக உறுதியளித்தார். மாணவ மாணவியர் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இந்நிகழ்வுக்கு கல்விக் குழுமத்தின் செயலர் பொறியாளர் க. இராஜசேகரன் தலைமை வகித்தார். இயக்குநர் முனைவர் க. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். பதிவாளர் முனைவர் எம். அனுசுயா வாழ்த்துரை வழங்கினார். கருத்தரங்கத்தில் கல்விக் குழுமத்தின் அனைத்து கல்லூரிகளின் ஒருங்கிணைப்பாளர் கள், துணை ஒருங்கிணைப்பாளர் கள் கலந்து கொண்டு நிகழ்வைச் சிறப்பித்தனர். இந்த நிகழ்வு, சமூக முன்னேற்றத்திற்கும் கல்வி சமத்துவத்திற்கும் ஒரு முக்கிய பாலமாக அமைந்தது எனலாம்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0