கட்டுக்கடங்கா கூட்டம் திணறுகிறது சபரிமலை : கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் உயிரிழப்பு என தகவல் : மத்திய ரிசர்வ் படை சபரிமலை விரைகிறது

Nov 18, 2025 - 21:13
கட்டுக்கடங்கா கூட்டம் திணறுகிறது சபரிமலை : கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் உயிரிழப்பு என தகவல் : மத்திய ரிசர்வ் படை சபரிமலை விரைகிறது

கட்டுக்கடங்கா கூட்டம் திணறுகிறது சபரிமலை : கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் உயிரிழப்பு என தகவல் : மத்திய ரிசர்வ் படை சபரிமலை விரைகிறது

கட்டுக்கடங்கா கூட்டம் திணறுகிறது சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி ஒரு பக்தர் உயிரிழப்பு என தகவல் சபரிமலைக்குச் செல்லும் வாகனங்கள் நடுவழியில் தடுத்து நிறுத்தம்: நிலக்கல்லுக்கு செல்ல கூட அனுமதி இல்லை. ஸ்பாட் புக்கிங் நிறுத்தம். மத்திய ரிசர்வ் படை இன்று சபரிமலை விரைகிறது சபரிமலையில் கட்டுக்கடங்காத பக்தர்கள் கூட்டத்தால் சபரிமலை திணறுகிறது. 18வது படி ஏறும் போது பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் பல பக்தர்கள் தடுப்புகளை விட்டு வெளியே வந்து சன்னிதானத்திற்குள் புகுந்ததால், பதட்டமான சூழல் ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் போலீசார் திணருகின்றனர். குடிதண்ணீர் உள்பட எந்த அடிப்படை வசதியும் கிடைக்கவில்லை என்றும் பக்தர்கள் புகார் சன்னிதானத்தில் நெரிசல் காரணமாக விபத்து ஏற்படக்கூடிய சூழ்நிலை உருவானதால் தேவசம்போர்டு தலைவர் கே. ஜெயக்குமார், கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த உடனடியாக தலையிடக் கோரி ஏடிஜிபி ஸ்ரீஜித்துக்கு அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். அவர் சன்னிதானம் காவல்துறை சிறப்பு அதிகாரியை அழைத்து உடனடியாக நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இதன் படி நெரிசலை கட்டுப்படுத்தும் ஒரு பகுதியாக எருமேலி-நிலக்கல் பாதையில் கனமலைப் பக்கத்தில் வாகனங்கள் நிறுத்தத் தொடங்கியுள்ளன. இனிமேல், நிலக்கல்லில் இருந்து வரும் அறிவுறுத்தல்களின் மட்டுமே வாகனங்கள் இங்கிருந்து உள்ளேயும் வெளியேயும் செல்ல அனுமதிக்கப்படும். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே நெரிசலை கட்டுப்படுத்த மத்திய படைகள் இன்று வரவழைக்கப்பட உள்ளது. ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டுள்ளது. கோயிலாண்டி என்ற ஊரைச் சேர்ந்த சக்தி என்ற 60 வயது பக்தர் அப்பாச்சி மேடு பகுதியில் நெரிசலில் சிக்கி மயங்கி விழுந்து உயிரிழந்ததாக தகவல்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0