பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம் : நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

Dec 3, 2025 - 09:28
Dec 3, 2025 - 13:18
பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம் : நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

பெயர் விலாசம் தெரியாத முதியவர் மரணம் : நல்லடக்கம் செய்த காவலர் மற்றும் சமூக செயற்பாட்டாளர்

திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுக்கா துவரங்குறிச்சி பேருந்து நிலையத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க முதியவர் உற்றார் உறவினர் இன்றி தன்னந்தனியாக சில வருடங்களாக யாசகம் கேட்டு உண்டு பொது இடங்களில் உறங்கி வந்துள்ளார். முதியவர் உடல்நிலை பாதித்து உடல்நல குறைவால் பேருந்து நிலையத்தில் படுத்து கிடந்தார். ஆதரவற்ற முதியவர் உயிரைக் காக்க பொதுமக்கள் உதவியுடன் 108 ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார். சிகிச்சை பெற்று வந்தவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இறந்த முதியவர் உடலை யாரும் உரிமை கூறப்படாத நிலையில் திருச்சி மாவட்டம் துரங்குறிச்சி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் செல்வேந்திரன் நல்லடக்கம் செய்வதற்காக ஆதரவற்ற அனாதை பிணங்களை நல்லடக்கம் செய்து வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார்க்கு தகவல் அளித்தார் தகவலின் அடிப்படையில் திருச்சி தென்னூர் குழுமிக்கரை மயானத்தில் துவரங்குறிச்சி காவல் நிலைய இரண்டாம் நிலை காவலர் முன்னிலையில் உரிமை கோரப்படாத ஆதரவற்ற உடலுக்கு உரிய மரியாதை உடன் இறுதி சடங்கு செய்து அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் யோகா ஆசிரியர் விஜயகுமார் நல்லடக்கம் செய்தார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0