திருச்சியில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு : மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கைவரிசை

Dec 11, 2025 - 16:19
திருச்சியில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம்  4 பவுன் செயின் பறிப்பு : மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சியில் யோகா பயிற்சிக்கு சென்ற பெண்ணிடம் 4 பவுன் செயின் பறிப்பு : மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் கைவரிசை

திருச்சி ரங்கா நகர் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஒருவர் யோகா மாஸ்டர் மல்லிகா என்பவருடன் சண்முகா நகர் 11வது கிராஸ் பகுதியில் நடைபெறும் யோகா பயிற்சி வகுப்புக்கு சென்றார். ரங்கா நகர் ஏழாவது கிராஸ் பகுதியில் சென்றபோது இரண்டு மர்ம நபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் மூதாட்டி கழுத்தில் கிடந்த நான்கு பவுன் செயினை அறுத்துக் கொண்டு தப்பி சென்றனர். மல்லிகாவும், அந்த மூதாட்டியும் திருடன் திருடன் என கத்தினர் இருந்தபோதிலும் மின்னல் வேகத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டி அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதுகுறித்து மூதாட்டி திருச்சி அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். அதன் பெயரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0