13-ஆம் ஆண்டு நினைவு நாள் : எல்.அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மரியாதை : ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
13-ஆம் ஆண்டு நினைவு நாள் : எல்.அடைக்கலராஜ் சிலைக்கு காங்கிரசார் மரியாதை : ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் நிர்வாகிகள் பங்கேற்பு
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் மாநில துணைத்தலைவரும், முன்னாள் திருச்சி பாராளுமன்ற உறுப்பினருமான எல்.அடைக்கலராஜின் 13 -ஆம் ஆண்டு நினைவு நாளை ஒட்டி திருச்சி ஜென்னி பிளாசாவில் உள்ள எல்.அடைக்கலராஜ் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாக குழு உறுப்பினர் தொழிலதிபர் ஜோசப் லூயிஸ் அடைக்கலராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொழிலதிபர்கள் ஜோசப் பிரான்சிஸ், வின்சென்ட் அடைக்கலராஜ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். இந்நிகழ்ச்சியில் திருவரங்கம் எம்எல்ஏ பழனியாண்டி, தொழிலதிபர் பாஸ்டின், முன்னாள் மாவட்ட தலைவர் ஜவஹர், திமுக மாநில பொதுக்குழு உறுப்பினர் கிராப்பட்டி செல்வம், மாநில பொதுச் செயலாளர்கள் வக்கீல் சரவணன், ஜி.கே.முரளி, வக்கீல் இளங்கோ, வக்கீல் தனபால், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேஷ் என்கிற சீனிவாசன், முன்னாள் மாவட்ட பொருளாளர் ராஜா நசீர், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கள்ளிக்குடி சுந்தரம், புங்கனூர் தாமோதரன், முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர் அல்லூர் சுரேஷ், வக்கீல் அல்லூர் பிரபு, வக்கீல் தனபால், மாவட்ட துணைத் தலைவர் வில்ஸ் முத்துக்குமார், மாநில பேச்சாளரும், காமராஜர் பேரவை மாவட்ட தலைவருமான சிவாஜி சண்முகம், தமிழ்நாடு சோழிய வெள்ளாளர் சங்கத்தின் மாநில துணைத்தலைவர் மகாலிங்கம், மக்கள் தொடர்பு சிவா ராஜ்மோகன், தென்னூர் மெய்ய நாதன், ஜோசப் ஜெரால்டு, பிரவீன் ஜெயபால் இளைஞர் காங்கிரஸ் ரமேஷ் சந்திரன், ஓவியர்
கஸ்பர், மலைக்கோட்டை ரவி, புத்தூர் சார்லஸ், அண்ணா சிலை விக்டர், சிறுபான்மை பிரிவு அப்துல் குத்தூஸ், உறந்தை செல்வம், உறையூர் எத்திராஜ், பீமநகர் காசிம், மேலப்புதூர் சத்தியநாதன், திருவரங்கம் சேட்டு, பாலக்கரை பிலால், வரகனேரி வைரவேல் மற்றும் ஏராளமான காங்கிரஸ் தொண்டர்கள், முக்கிய பிரமு கர்கள், நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0