திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள்

Jun 30, 2026 - 16:55
Jun 30, 2026 - 16:56
திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள்

திருச்சி மாவட்டம் இனாம் பெரிய நாயகி சத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் போதை பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக ராம்ஜிநகர் காவல் உதவி ஆய்வாளர் வாசுதேவன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் திருமதி மாதவி, பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் திருமதி மகேஸ்வரி ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு சிறப்பு உரையும் கலை நிகழ்ச்சியையும் கண்டு களித்தனர். பின்னர் இப்பள்ளியில் பயிலும் 140 மாணவர்களும் போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை அனுசரிக்கும் தினமாக போதைப் பொருள் ஒலிக்கும் வாசகத்தை பதாகை மூலம் ஏந்தி கொண்டு ஊர்வலமாக அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இறுதியாக விழாவிற்கு வந்த அனைவரையும் வரவேற்று பேசினார் இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் நா அழகு சுப்பிரமணியன் . இன்றைய தினத்திலிருந்து இப்பள்ளியில் பயிலக்கூடிய மாணவர்கள் மாணவர்களின் பெற்றோர்கள் உற்றார் உறவினர்கள் அண்டை வீட்டுக்காரர்கள் எவரேனும் போதை க்கு அடிமையாகி இருந்தால் அவர்களை இவ் வருடத்திற்குள் போதை விழிப்புணர்விலிருந்து காப்பாற்றிட உறுதிமொழி எடுக்க வேண்டும் என்றும் அவ்வாறு எடுக்கப்பட்ட உறுதி மொழியில் உண்மை என கண்டறியப்பட்டால் என்னால் ஒருவர் திருந்தி விட்டார் என்பதை இங்கு கூறினால் ஆண்டு விழாவில் அவருக்கும் அவரை அவரால் திருத்தப்பட்டவருக்கும் தக்க சன்மானம் பள்ளியின் சார்பாகவும் ராம்ஜி நகர் காவல் ஆய்வாளர் வாசுதேவன் அவர்களாலும் தக்க சன்மானம் வழங்கப்படும் என தெரிவித்தனர். முடிவில் பட்டதாரி கணிதாசிரியர் உதவி தலைமை ஆசிரியர் திருமதி ஜெய் நபி நன்றி கூறினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0