என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு சிலம்ப பேரணி : உலக சாதனை படைத்த திருச்சி மாணவி சுகித்தாவுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

Jul 7, 2026 - 11:25
என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு சிலம்ப பேரணி : உலக சாதனை படைத்த திருச்சி மாணவி சுகித்தாவுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

என் வாக்கு என் உரிமை விழிப்புணர்வு சிலம்ப பேரணி : உலக சாதனை படைத்த திருச்சி மாணவி சுகித்தாவுக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

மத்திய அரசின் விளையாட்டு துறை அமைச்சகத்தின் மை பாரத் கேந்திரா, திருச்சியில் வீரமங்கை வேலுநாச்சியாரின் பெயரில் பதிவு செய்யப்பட்ட அமைப்பின் மூலம், கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களை ஒன்றிணைத்து பல்வேறு சமூகப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதன் தலைவராக ஹோலி கிராஸ் கல்லூரி முதலாம் ஆண்டு மாணவி மோ.பி.சுகித்தா செயல்பட்டு வருகிறார். இதன் தொடர்ச்சியாக, தமிழகத்தில் நடைபெற சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, பொதுமக்களிடம் வாக்களிப்பின் அவசியத்தை எடுத்துரைக்கும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. திருச்சி தேர்தல் அலுவலர்கள் மற்றும் மை பாரத் கேந்திரா திருச்சி மற்றும் கலைக்காவிரி கல்லூரியுடன் இணைந்து, 750க்கும் மேற்பட்ட சிலம்ப மாணவர்கள் பங்கேற்ற சிலம்பம் நடைபயணம் சுமார் இரண்டு கிலோமீட்டர் தொலைவு பேரணி நடைபெற்றது. இந்த நிகழ்வானது ஆசியா உலக சாதனை புத்தகத்தால் ஆய்வு செய்யபட்டு இது உலக சாதனையாக அங்கீகரிக்கபட்டு சான்றிதழ் அளிக்கபட்டதை தொடந்து திருச்சி மாவட்ட கலெக்டர். பிரதிக் தயாள்யிடம் வாழ்த்து பெற்றார். அப்பொழுது கலைக்காவிரி நுண்கலைக் கல்லூரி பேராசிரியர், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் கி.சதீஷ் குமார், வரகனேரி என்.கே. ரவிச்சந்திரன், மோகன், சிலம்ப ஆசான் ஜெயக்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0