P.S.R. அறக்கட்டளையின் 14 ஆம் ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாட்டம்

Oct 5, 2025 - 19:22
Oct 5, 2025 - 21:33
P.S.R. அறக்கட்டளையின் 14 ஆம் ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாட்டம்

P.S.R. அறக்கட்டளையின் 14 ஆம் ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாட்டம்

திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள கலையரங்கத்தில் பிஎஸ்ஆர் அறக்கட்டளை மூலம் 1300 குழந்தைகளுடன் 14ஆம் ஆண்டு சிறார் தீபாவளி நிகழ்வு விமர்சையாக கொண்டாடப்பட்டது.

 திருச்சியை மையமாக கொண்டு இயங்கி வரும் பிஎஸ்ஆர் அறக்கட்டளை கடந்த பத்து வருடங்களாக நூற்றுக்கணக்கான குழந்தைகளின் கல்விக்கு உதவி செய்வதுடன், ஆதாரவற்றோர், சாலையோர மக்களுக்கு உணவளிப்பது, பள்ளி கல்லூரி மாணவர்களுக்கு வழிகாட்டுதல், குருதி வழங்குதல் உட்பட பல்வேறு சமூக முன்னெடுத்து நடத்திவருகின்றது. 

குறிப்பாக கடந்த 14 வருடங்களாக அரசு குழந்தைகள் காப்பகங்கள், அரசு உதவி பெறும் குழந்தைகள் காப்பகங்கள், குடிசைவாழ் பகுதியை சேர்ந்த குழந்தைகள் என 15 குழந்தைகளில் ஆரம்பித்த சிறார் தீபாவளி பயணம் இந்தாண்டு 1300 குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது. வெகு விமர்சையாக ஒரு இடத்தில் அத்தனை குழந்தைகளையும் ஒன்றிணைத்து புது ஆடை, சிறப்பு பரிசு, உணவு என ஒவ்வொரு குழந்தைக்கும் கொடுத்து அவர்களின் முகத்தில் மகிழ்ச்சியை பரவ செய்வதே எங்களின் நோக்கம் என கூறும் பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா, ஒவ்வொரு வருடத்திலும் தீபாவளி தேதிக்கு மூன்று மாதத்திற்கு முன்பாகவே பணிகளை இதற்கான ஆரம்பித்து விடுவதாகவும், குழந்தைகளுக்கு தேவையான ஆடைகளை தேடி தேடி வாங்குவதுடன், அவர்களுக்கான பரிசு, உணவுகளையும் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதில் மாற்றுகருத்தே இல்லாமல் செயல்படுவோம் என்கிறார். இந்த ஆண்டு சிறார் தீபாவளி கொண்டாடட்டத்துடன் 10ஆம் ஆண்டு பிஎஸ்ஆர் அறக்கட்டளையின் துவக்கவிழாவும் நடைபெற்றது. இந்த விழாவின் சிறப்பாக பல்வேறு பிரிவுகளில் சமூக நல பணிகளை மேற்கொண்டு வரும் சமூக சேவகர்களுக்கு விருது வழங்கும் விழாவும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டார். கௌர விருந்தினராக எக்ஸல் குரூப் ஆப் கம்பெனியின் சேர்மன் Rtn AKS Er.முருகானந்தம், சிறப் அழைப்பாளர்களாக திருச்சி மாவட்ட குழந்தைக பாதுகாப்பு அதிகாரி பி.ராகுல்காந்தி, குழந்தைகள் நல குழுவின் தலைவர் மோகன், நேஷனல் கல்லூரியின் துணை முதல்வர் பிரசன்னா பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் பிஎஸ்ஆர் அறக்கட்டளயின் நிர்வாக அறங்காவலர் ஷேக் அப்துல்லா, நிதி அறங்காவ Dr.டி. குணசீலன், செயலாளர் அறங்காவலர் மாலி ஆகியோரும் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0