திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

Jul 31, 2026 - 14:23
திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

திருச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி

போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு மனித சங்கிலி நிகழ்ச்சி இரட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியின் சார்பாக உயங்கொண்டான் போலீஸ் சோதனை சாவடி அருகில் போதைக்கு எதிரான வாசகங்களை கையில் ஏந்தியும், உறுதிமொழி ஏற்றும் போதை ஒழிப்பு மனித சங்கிலி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியை திருச்சி அரசு பொது மருத்துவமனை காவல் நிலையத்தின் ஆய்வாளர் விஜயகுமார், பள்ளியின் முதல்வர் திருமதி. உஷாராகவன், தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடல்கல்வி ஆசிரியர்களும் துவக்கி வைத்து கலந்து கொண்டனர். இதில் பள்ளி 11ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் சுமார் 250க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு போதைக்கு எதிரான முழக்கங்களையும் கையில் பதகைகள் ஏந்தி மக்கள் மத்தியிலும் இளைஞர் மத்தியிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள். இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் அனைவரும் கண்டு களித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0