கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

Aug 9, 2026 - 15:51
Aug 9, 2026 - 15:52
கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு  மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

கலைஞரின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் : முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்

முன்னாள் முதல்வர் கருணாநிதி அவர்களின் 8-ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு, 38-வது வார்டு மாமன்ற உறுப்பினர் M. தாஜுதீன் ஏற்பாட்டில், GVN RIVERSIDE HOSPITAL மற்றும் மேக்ஸிவிஷன் கண் மருத்துவமனை இணைந்து மாபெரும் இலவச பொது மற்றும் கண் மருத்துவ முகாம் நடத்தின. இந்த முகாமினை தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சர்ருமான முனைவர். அன்பில் மகேஸ் பொய்யாமொழி துவக்கி வைத்தார். இந்த முகாமில் கண் பரிசோதனை செய்து கொள்பவர்கள் அனைவருக்கும் பவர் கண்ணாடி இலவசமாக வழங்கப்பட்டது.

முகாமில் : பார்வை குறைபாடுகள் (Refractive Error) முதியோர் கண் குறைபாடுகள் (ARMD) கண்நூரை பரிசோதனை (Cataract) குழந்தைகள் கண் குறைபாடு (Pediatric Vision Problems) சர்க்கரை கண் நோய் (Retinopathy) கண் நீர் அழுத்தம் (Glaucoma) இரத்த சர்க்கரை அளவு கண்டறிதல் (GRBS) இரத்த அழுத்தம் (Blood Pressure) ECG பரிசோதனை (40 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும்) உடல் எடை உயரம் மற்றும் எலும்பு அடர்த்தி (Bone Density) பல் மருத்துவம் (Dental) காது, மூக்கு, தொண்டை மருத்துவம் (ENT - மதியம் 1 மணி முதல் 3 மணி வரை) 40 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாம்பக பரிசோதனை மற்றும் சிறப்பு மருத்துவர் ஆலோசனை வழங்கப்பட்டது. முகாமில் மாநகரக் கழகச் செயலாளர் மதிவாணன், பகுதி செயலாளர் நீலமேகம் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0