உரிமை கோரப்படாத உடலினை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு சமூகப்பணிச் செம்மல் விருது

Aug 11, 2026 - 16:03
Aug 11, 2026 - 16:04
உரிமை கோரப்படாத உடலினை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு சமூகப்பணிச் செம்மல் விருது

உரிமை கோரப்படாத உடலினை நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளர்க்கு சமூகப்பணிச் செம்மல் விருது

திருச்சி நொச்சியம் சண்முகம் - சாரதாம்பாள் நினைவு அறக்கட்டளை நிறுவுநர் நொச்சியம் ச.சண்முகநாதன் திருமதி ச. அருள்மொழி திருமண விழா என்பதாவது அகவை நிறைவு விழா திருச்சியில் நடைபெற்றது. விழாவில் 1995 ஆண்டு முதல் அறிவார்ந்த சமூகத்தை உருவாக்க இலவச நூலகம், பசிப்பிணி போக்க அன்றாடம் அன்னதானம், பாரம்பரியம் காக்க புழங்கு பொருட்கள் காட்சியகம் நடத்தி வருகிறார். மேலும் உரிமை கோரப்படாத ஆதரவற்ற பிரேதங்களை கண்ணியமான முறையில் இறுதி சடங்கு செய்து நல்லடக்கம் செய்து வரும் சமூக செயற்பாட்டாளரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலருமான யோக ஆசிரியர் விஜயகுமார் மனிதநேயப்பணியினை பாராட்டி திருச்சி நொச்சியம் சண்முகம் - சாரதாம்பாள் நினைவு அறக்கட்டளை சமூகப்பணிச் செம்மல் விருதினை திருச்சிராப்பள்ளி தமிழ்ச்சங்கம் அமைச்சர் உதயகுமார் வழங்க, ஐந்தாயிரம் பொற்கிழியினை நொச்சியம் சண்முகம் வழங்கினார்.

சமூகப்பணி என்பது பொருளுதவி செய்வதோடு முடிந்து விடுவதல்ல. ஒரு மனிதனின் வாழ்க்கையை உயர்த்துவது, அறிவைப் பகிர்வது, பண்பாட்டைப் பாதுகாப்பது, ஆதரவற்ற நிலையில் வாழும் மக்களுக்கு துணை நிற்பது என சமூகத்தின் பல்வேறு தேவைகளுக்காகத் தொடர்ந்து உழைப்பதே உண்மையான சமூகப்பணி. அந்த உயரிய நோக்கத்துடன் பல ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் அமிர்தம் சமூக சேவை அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் விஜயகுமார் இல்லத்திலேயே இலவச நூலகம், பாரம்பரிய புழங்கு பொருட்கள் காட்சியகம், ஆதரவற்றோர் மற்றும் உரிமை கோரப்படாதவர்களின் நல்லடக்கப் பணியினை மேற்கொண்டு வருகிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0