திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா

Aug 21, 2026 - 09:58
Aug 21, 2026 - 09:59
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா இன்று கோலாகலமாக நடைபெறுகிறது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

மத்திய மண்டலக் காவல்துறை தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் முதன்மை விருந்தினராகப் பங்கேற்று ஒலிம்பிக் கொடியை ஏற்றி வைத்து கல்லூரியின் தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் அனைத்துத்துறை மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு உரையாற்ற இருக்கிறார்.

சிறப்பு விருந்தினராக திருச்சி சுங்கவரித்துறைக் கூடுதல் ஆணையரும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் பங்கேற்று மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கி உரையாற்ற இருக்கிறார். மாணவர்களுக்கான தடகளப் போட்டிகள், பேராசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கான அதிர்ஷ்ட சக்கரப் போட்டியும் விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளன.

நிறைவாக விளையாட்டுத்துறை ஒருங்கிணைப்பாளரும். துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி நன்றியுரையாற்றுகிறார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0