திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா : பொருளியல்துறை சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது

Aug 23, 2026 - 14:07
Aug 23, 2026 - 14:07
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா : பொருளியல்துறை சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா : பொருளியல்துறை சாம்பியன்ஷிப் கோப்பையைக் கைப்பற்றியது

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் 183 வது விளையாட்டு விழா நடைபெற்றது. கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் கல்லூரிச் செயலர் அருள்முனைவர் ம.ஆரோக்கியசாமி சேவியர், இணை முதல்வர் முனைவர் த.குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் அருள்முனைவர் கு.ஆரோக்கியம் வரவேற்புரையாற்றி, சிறப்பு விருந்தினர்களை அறிமுகம் செய்தார்.

மத்திய மண்டலக் காவல்துறைத்தலைவர் வி.பாலகிருஷ்ணன் ஐபிஎஸ் முதன்மை விருந்தினராகவும், திருச்சி சுங்கவரித்துறைக் கூடுதல் ஆணையரும் தூய வளனார் கல்லூரியின் முன்னாள் மாணவருமான கே.விஜயகிருஷ்ண வேலவன் கௌரவ விருந்தினராகவும் பங்கேற்று உரையாற்றி மாணவர்களுக்கும் பரிசளித்து பாராட்டினார். புள்ளிகளின் அடிப்படையில் பணிமுறை ஒன்று மாணவர்களுக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஸ் பட்டதை பொருளியல் துறையும், பணிமுறை இரண்டு மாணவர்களுக்கான சாம்பியன்ஸ் பட்டத்தை உடற்கல்வியியல் துறையும், மாணவியருக்கான ஒட்டுமொத்த சாம்பியன்ஷிப் பட்டத்தை வணிகவியல் மேதைமைத் துறை உள்ளிட்ட மூன்று துறைகள் அடங்கிய அணியும் கைப்பற்றியது. உடற்கல்வி இயக்குனர் பிரேம் எட்வின், உதவி உடற்கல்வி இயக்குநர் எஸ்.ரெனில்டன் பிரீஸ், முனைவர் விமல் ஜெரால்டு உள்ளிட்ட பேராசிரியர் பரிசு பெற்ற மாணவர்களின் பெயர்களை வாசிக்க அருள்தந்தையர்கள், விருந்தினர்கள் மாணவர்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி மகிழ்ந்தனர். நிறைவாக விளையாட்டுத்துறை இயக்குநரும். துணை முதல்வருமான அருள்முனைவர் அருள்ஒளி நன்றியுரையாற்றினார்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0