திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

Sep 4, 2026 - 13:18
Sep 4, 2026 - 13:19
திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் கிருஷ்ண ஜெயந்தி விழா

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயம் பள்ளியில் இன்று கிருஷ்ண ஜெயந்தி விழா நடைபெற்றது. பள்ளியில் மாணவ மாணவிகள் கிருஷ்ணர் மற்றும் ராதை வேடம் அணிந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். மாணவர்கள் அனைவருக்கும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு மிக அழகாக வேடமிட்ட கிருஷ்ணர் மற்றும் ராதை வேடமிட்ட குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் உரியடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் வகுப்பு 6 முதல் 12 வகுப்பு வரை உள்ள அனைத்து மாணவ, மாணவிகளும் உரியடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். பின்னர் கிருஷ்ணருக்கு நடைபெற்ற சிறப்பு பூஜையில் அனைத்து ஆசிரியர்களும், பெற்றோர்களும் கலந்து கொண்டனர்.

 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவிகளின் ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் மற்றும் நடன நிகழ்ச்சிகள் தத்ரூபமாக நடித்து காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் பெற்றோர்கள் மாணவர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0