திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சரை எதிர்த்து அமைச்சரின் மருமகன் போட்டியா

Nov 11, 2025 - 22:27
Nov 12, 2025 - 07:23
திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சரை எதிர்த்து அமைச்சரின் மருமகன் போட்டியா

திருச்சி மேற்குத் தொகுதியில் அமைச்சரை எதிர்த்து அமைச்சரின் மருமகன் போட்டியா

கடந்த 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திருச்சி மேற்கு தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் கே.என்.நேரு. இந்த மேற்கு தொகுதி உருவாக்கப்பட்ட 2011-ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த மரியம் பிச்சை வெற்றி பெற்றார். ஆனால் மரியம் பிச்சை சாலை விபத்தில் மரணமடைந்ததை தொடர்ந்து அக்டோபர் மாதம் 2011-ம் ஆண்டு இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் அதிமுகவை சேர்ந்த பரஞ்ஜோதி வெற்றி பெற்றார். இரண்டு தேர்தல்களிலும் திமுக சார்பில் கே என் நேரு போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார். 2016 நடைபெற்ற தேர்தலில் அதிமுகவை சேர்ந்த ஆர். மனோகரனை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றார். 2021 இல் நடைபெற்ற தேர்தலில் மீண்டும் மேற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் கருமண்டபம் பத்மநாதனை எதிர்த்துப் போட்டியிட்டு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை (நகராட்சி நிர்வாகம், நகர்ப்பகுதி, குடிநீர் வழங்கல்) அமைச்சராக பணியாற்றி வருகிறார். தற்போது திருச்சி மேற்கு தொகுதியில் உள்ள 23 வார்டுகளிலும் உள்ள நிர்வாகிளின் கோரிக்கைகளை நிவர்த்தி செய்து வருவதால் அமைச்சர் கே என் நேரு மீண்டும் அவர் 2026 சட்டமன்ற தேர்தலில் மேற்குத் தொகுதியில் போட்டியிட உள்ளதாக திமுகவினர் உறுதியாக கூறுகின்றனர். திருச்சி மேற்கு தொகுதியில் பூத் வாரியாக, வட்டம், பாகம், பகுதி நிர்வாகிகள் திமுக வெற்றி பெற உழைத்து வருகின்றனர். இதே போல் அதிமுகவிலும் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் அதிமுக சார்பில் யார் வேட்பாளராக நின்றாலும் அவரை வெற்றி பெற வைக்க நிர்வாகிகள் தீவிரமாக பணியாற்றி வருகிறார்கள். மேற்கு தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பூத் கமிட்டி கூட்டம், நிர்வாகிகள் சந்திப்பு என முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா தலைமையில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில் திமுக சார்பில் அமைச்சர் கே என் நேரு போட்டியிட்டால் அவரை எதிர்த்து மேற்கு தொகுதியில் போட்டியிட பலரும் ஆர்வம் காட்டினாலும் திமுக அமைச்சரை எதிர்த்து திமுக அமைச்சரின் (தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி கணேசன்) மருமகன் பொன்னார் போட்டியிட விருப்பம் தெரிவித்து தயாராகி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தற்போது திருச்சி மாநகர் மாவட்ட பேரவை துணை செயலாளராக பணியாற்றி வருகிறார். இவர் தமக்கு மேற்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கிடைத்தால் மாவட்ட செயலாளர் சீனிவாசன் தலைமையில் நிர்வாகிகளையும் ஒன்றிணைத்து மேற்கு தொகுதியில் வெற்றி பெற்று பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் வெற்றியை சமர்ப்பிப்போம் என்று நம்பிக்கையுடன் கூறி வருகிறார். இதனால் திருச்சி மேற்கு தொகுதியில் போட்டியிட இவருக்கு வாய்ப்பு கிடைத்தால் அமைச்சரை எதிர்த்து அமைச்சரின் மருமகன் போட்டியிட்டால் திருச்சி மேற்கு தொகுதி தமிழகத்தில் மிக முக்கிய தொகுதியாக கருதப்படும் என்பது சந்தேகம் இல்லை.

(ஸ்ரீரங்கம் தொகுதியில் இளைஞர்களுக்கு போட்டியிட வாய்ப்பு கிடைக்குமா ....?)

What's Your Reaction?

Like Like 3
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 2
Angry Angry 0
Sad Sad 1
Wow Wow 2