திருச்சியில் ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழா : நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசுக்கு கோரிக்கை

Sep 20, 2025 - 18:14
திருச்சியில் ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழா : நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசுக்கு கோரிக்கை

திருச்சியில் ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழா : நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க அரசுக்கு கோரிக்கை

திருச்சியில் ஒருங்கிணைந்த அனைத்து செல்போன் விற்பனையாளர்கள் சங்கம் தொடக்க விழா மற்றும் ஆலோசனைக் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது. கூட்டத்தில் நிர்வாக குழு உறுப்பினர்களான இப்ராம்ஷா, ரபியுதீன், சையதுமுஸ்தபா, திருமாவளவன், லக்கி ஷாஜகான், சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் வியாபாரிகளின் முன்னேற்றத்திற்காகவும், வளர்ச்சிக்காகவும் உருவாக்கப்படுகிறது. நலிவடைந்த வியாபாரிகளுக்கு நலத்திட்ட உதவிகள் செய்வது, செல்போன் சேல்ஸ் சர்வீஸ் மற்றும் உதிரி பாகங்களுக்கு செய்யும் வியாபாரிகளுக்கு மட்டுமே தொடங்கப்படுகிறது. வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுவதால் ஆன்லைன் விற்பனைகளை தடை செய்ய வலியுறுத்தி தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தல். போலி வியாபாரம் சமூக வலைத்தளத்தில் பரப்பி வியாபாரம் செய்யும் வியாபாரிகளை கண்டறிந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்தல். வருடத்திற்கு ஒரு முறை சங்க உறுப்பினர்களுக்கு மருத்துவ முகாம் இலவசமாக நடத்துவது, சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு செயல்படுவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இந்த கூட்டத்தில் 200க்கும் மேற்பட்ட திருச்சியில் உள்ள செல்போன் வியாபாரிகள் பங்கேற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0