பஸ் நிலையத்தில் கைப்பையை திருடிய பெண் கைது

Dec 16, 2025 - 18:20
பஸ் நிலையத்தில் கைப்பையை திருடிய பெண் கைது

பஸ் நிலையத்தில் பெண்ணிடம் கைப்பையை திருடிய பெண் கைது

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை பெரியார் நகர் பகுதியை சேர்ந்தவர் சத்யா (35). இவர் திருச்சி பஞ்சப்பூர் பஸ் நிலையத்தத்தில் கோவை செல்வதற்காக நின்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம பெண் சத்யாவின் கைப்பையைத் திருடி சென்றார். அதில் வெளிநாட்டு பாஸ்போர்ட், ஆதார் கார்டு, வங்கி பாஸ் புத்தகம்,ரூ.2500 ரொக்கம் ஆகியவை உள்ளன. இதுகுறித்து புகாரின் பேரில் எடமலைப்பட்டி புதூர் போலீசார் வழக்கு பதிந்து திருப்பூர் வீரபாண்டி ஆவாரப்பாளையம் பகுதியை சேர்ந்த கலைமணியை (45) கைது செய்தனர்.

 அவரிடமிருந்து ரூ.2500 பணத்தை பறிமுதல் செய்தனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0