திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை : தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பங்கேற்பு

May 26, 2026 - 09:44
May 26, 2026 - 10:01
திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை : தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பங்கேற்பு

திருச்சி எம்ஜிஆர் சிலைக்கு வாரியத் தலைவர் கு.ப.கிருஷ்ணன் மாலை அணிவித்து மரியாதை : தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் பங்கேற்பு

தமிழக வெற்றி கழகத்தின் டெல்டா மண்டல பொறுப்பாளராக இருப்பவர் முன்னாள் அமைச்சர் கு.ப.கிருஷ்ணன். நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியினர் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் வாரிய தலைவர் கு.ப.கிருஷ்ணன் நிர்வாகிகளுடன் திருச்சி நீதிமன்றம் அருகில் உள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து தலைவர்கள் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் நிர்வாகிகள் சிரஞ்சீவி, கருமண்டபம் பத்மநாதன், லோகநாதன், ரஜினிகாந்த், எம்ஜிஆர் நகர் கரிகாலன், ஏர்போர்ட் விஜி, வழக்கறிஞர் தேவா, உய்யக்கொண்டான் திருமலை பால்ராஜ், ஆனந்தகிருஷ்ணன், வரகனேரி அரசு, எட்டரை வீரையன் எனர்ஜி அப்துல் ரகுமான், இனியானூர் இன்ஜினியர் பரமசிவம், உடையான்பட்டி செல்வம் மற்றும் திரளான நிர்வாகிகள் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0