திருச்சி லால்குடி வெங்கடாசலபுரத்தில் நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் குறித்த களப்பயிற்சி

Jun 11, 2026 - 20:12
திருச்சி லால்குடி வெங்கடாசலபுரத்தில் நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் குறித்த களப்பயிற்சி

திருச்சி லால்குடி வெங்கடாசலபுரத்தில் நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் குறித்த களப்பயிற்சி

திருச்சி மாவட்டம், சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையம் மூலம் பல்வேறு பயிற்சிகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, குறுவை நெல் சாகுபடியில் உயர் விளைச்சல் தொழில்நுட்பங்கள் பற்றிய களப்பயிற்சி புள்ளம்பாடி வட்டாரம் வெங்கடாசலபுரம் கிராமத்தில் நடைபெற்றது. இப்பயிற்சியில் வேளாண்மை அறிவியல் நிலைய இணைப்பேராசிரியர் முனைவர் ராதிகா, நெல்லில் குறுவை பருவத்துக்கு ஏற்ற புதிய இரகங்கள், அதன் சிறப்பியல்புகள், நெல்லில் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களான ஒருங்கிணைந்த களை மேலாண்மை ஒருங்கிணைந்த நீர் மேலாண்மை மற்றும் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை, மண் பரிசோதனை மற்றும் அங்கக வேளாண்மை முறையில் நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் அளித்து விளக்கவுரை ஆற்றினார். இணைப்பேராசிரியர் முனைவர் மாரிமுத்து, மண் வளம் பாதுகாப்போம் இயக்கத்தின் முக்கிய குறிக்கோளான சமச்சீர் உர பயன்பாட்டின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். இந்நிகழ்ச்சியில் புள்ளம்பாடி வட்டார வேளாண்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இதில் ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.

What's Your Reaction?

Like Like 0
Dislike Dislike 0
Love Love 0
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0