முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வண்ணாரப்பேட்டை சி ரத்தின பாண்டியன் ஏற்பாட்டில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு. ப. கிருஷ்ணன் வழங்கினார்
முதல்வர் விஜய் பிறந்த நாளை முன்னிட்டு திருச்சி வண்ணாரப்பேட்டை சி ரத்தின பாண்டியன் ஏற்பாட்டில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் : வாரியத் தலைவர் கு. ப. கிருஷ்ணன் வழங்கினார்
தமிழக வெற்றிக்கழக தலைவர் முதலமைச்சர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சி வண்ணாரப்பேட்டை த.வெ.க. பிரமுகர் சி.ரத்தின பாண்டியன் ஏற்பாட்டில் திடீர் நகரில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. இதில் டெல்டா மண்டல பொறுப்பாளரும் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய தலைவருமான கு.ப. கிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பள்ளி குழந்தைகளுக்கு நோட்டு புத்தகங்கள், ஏழை எளியோருக்கு குடங்கள் மற்றும் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கினர்.
நிகழ்ச்சிக்கு அப்பாதுரை முன்னிலை வகித்தார். முன்னதாக வாரிய தலைவருக்கு மேள தாளங்கள் முழங்க பட்டாசு வெடித்து ஆளுயர மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
நிகழ்வில் நிர்வாகிகள் கு.ப. கி. சஞ்சீவி, பத்மநாதன், என்.எஸ். பூபதி, ஏர்போர்ட் விஜி, ரஜினிகாந்த், உஸ்மான் பாபு, கரிகாலன், சதீஷ் குமார், மேகராஜன், சற்குணன், பாலு, கிளமெண்ட் வசந்த், விஜய், சந்தோஷ், பி. பிரபாகரன், எஸ் கலைமணி, தமிழ், வி. கார்த்திக், கணேசன், வெள்ளைச்சாமி, சி வெள்ளைச்சாமி, பி.சூர்யா, அஜித் குமார் சந்தோஷ் குமார், மணிவேல் எஸ் ராஜு சக்திவேல், ஆர் சோமசுந்தரம் ஆர் மணிகண்டன் ராம்குமார் பிரவீன், சுள்ளான் கணேஷ், ஷர்புதீன், ஆர் பாலு, நம்பிராஜன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
What's Your Reaction?
Like
0
Dislike
0
Love
0
Funny
0
Angry
0
Sad
0
Wow
0