திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயா பள்ளியில் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம்

Jul 1, 2026 - 14:51
திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயா பள்ளியில் தேர்தல் மூலமாக  தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம்

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயா பள்ளியில் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் மன்ற மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம்

திருச்சி ரெட்டை வாய்க்கால் அமிர்த வித்யாலயா பள்ளியில் 2026 - 27 கல்வி ஆண்டுக்கான மாணவர் மன்ற துவக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு இந்திய ராணுவ முன்னாள் படைவீரர் திரு. காட்வின் புஷ்பராஜ் கலந்து கொண்டு இந்த கல்வியாண்டில் தேர்தல் மூலமாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் அணி தலைவர், தலைவி, விளையாட்டு அணி தலைவர், தலைவி மற்றும் பல்வேறு அணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் திருமதி. உஷாராகவன் குத்துவிளக்கேற்றி துவக்கி வைக்க பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் வரவேற்புரை மற்றும் நன்றி உரை கூறினார்கள். புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட மாணவ, மாணவிகள் சமூகத்திலும் பள்ளியிலும் தலைமை பண்போடு நாம் எவ்வாறு திகழ வேண்டும் என்று கூறியதோடு புதிய தலைவர்களாக உருவாக உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக பல நல்ல கருத்துக்களை சிறப்பு விருந்தினர் எடுத்துக் கூறினார்கள். அதேபோல் இந்த ஆண்டு கல்வியாண்டில் பல்வேறு அணிகளின் பொறுப்பு ஆசிரியர்களுக்கும் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார் சிறப்பு விருந்தினர். இந்த நிகழ்ச்சியில் மாணவர்கள், பெற்றோர்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

What's Your Reaction?

Like Like 1
Dislike Dislike 0
Love Love 1
Funny Funny 0
Angry Angry 0
Sad Sad 0
Wow Wow 0